பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : சந்திர போஸ்
குழு : ………………………….
ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே
நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே
என் ஜென்மம் உன் அன்பிலே
மடிமேல் நிலவே விடியும் பொழுதே
ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே
குழு : ………………………………..
ஆண் : ஆஅ…..ஆ….ஆ….ஆ….ஆஅ….லா லா லா லா
ஆண் : தாயாரை யார் என்று காணாதவன்
தாலாட்டு பாட்டொன்றும் கேளாதவன்
நீ இன்றி சொந்தங்கள் இல்லாதவன்
நீ அன்னை நீ பிள்ளை என்றானவன்
ஆண் : உனது சொந்தம் உனது பந்தம்
எனது வாழ்வின் வசந்த காலம்
நீ எந்தன் தேவாலயம்
கலைமான் விழியே மழலை மொழியே
குழு : …………………………..
ஆண் : எந்நாளும் காயாத கங்கை நதி
என் மார்பில் சாய்ந்தாடும் தங்கை இவள்
நீ போகும் பல்லாக்கு என் தோளிலே
நீதானே கார்காலம் என் வானிலே
ஆண் : மலரின் மீதும் நடக்கும் போதும்
உனது பந்தம் சிவந்து போகும்
என் நெஞ்சம் தாங்காது அம்மா
சிரித்தாள் சிரிப்பேன் அழுதால் துடிப்பேன்
ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே
நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே
என் ஜென்மம் உன் அன்பிலே
மடிமேல் நிலவே விடியும் பொழுதே
ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே
கை வீசி போகின்ற பூஞ்சோலையே