பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
காதலை நான் கண்டு கொண்டேன்
உன் விழியின் பார்வையில்
என்னை நான் கண்டு கொண்டேன்
ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
காதலை நான் கண்டு கொண்டேன்
உன் விழியின் பார்வையில்
என்னை நான் கண்டு கொண்டேன்
ஆண் : சொல்லிக் கொண்டேன் சொல்லிக் கொண்டேன்
என் மனதில் சொல்லிக் கொண்டேன்
ரகசியமாய் என்னுள்ளே
உன் பேரை சொல்லிக் கொண்டேன்
ஆண் : நெஞ்சுக்குள் ஆயிரம்
பூ பூக்கும் வாசனை
எப்போதும் என்னுள்ளே
பெண்ணே உன் யோசனை
மனதில் விழுந்த
முதல் மழை நீயடி……
ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
காதலை நான் கண்டு கொண்டேன்
உன் விழியின் பார்வையில்
என்னை நான் கண்டு கொண்டேன்
ஆண் : உன்னைக் கண்ட பின்னே
என் நெஞ்சம் ஏனோ தொலைந்தது
என் மூச்சினுள்ளே
உன் வாசம் தானே வீசுது
ஆண் : உந்தன் பேரைச் சொல்ல
மனம் மெல்ல தூண்டுதே
எந்தனுள்ளே மாற்றம்
தடுமாற்றம் தோன்றுதே
ஆண் : முதல் முறையாய் நானின்று
வேறொரு கிரகத்தில் நீந்துகின்றேன்
காதலெனும் சொர்க்கத்திலே
அழகிய கனவுகள் வாங்குகிறேன்
அழகான வெண்ணிலவே
நீதானே என் நிலவே
உனக்கேதான் என் இரவே கேளடி
ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
காதலை நான் கண்டு கொண்டேன்
உன் விழியின் பார்வையில்
என்னை நான் கண்டு கொண்டேன்
ஆண் : வேறு என்ன வேண்டும்
நான் வாழ நீயே போதுமே
மரணம் வந்தால் கூட
உன் காதல் என்னை காக்குமே
ஆண் : உன்னை சேரத்தானே
நான் ஆணாய் பிறந்தது
உந்தன் கண்கள் சொன்ன
ஒரு வார்த்தை இனிக்குது
ஆண் : எனக்கான தேவதை நீ
உனக்கொரு கோவிலை நான் அமைப்பேன்
உன் நினைவை தினம் சேர்த்து
இரவெல்லாம் அமிர்தமாய் நான் சுவைப்பேன்
உன் தேகம் பூங்கீற்றா
உன் பார்வை பூங்காற்றா
உன் வார்த்தை நீரூற்றா சொல்லடி
ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
காதலை நான் கண்டு கொண்டேன்
உன் விழியின் பார்வையில்
என்னை நான் கண்டு கொண்டேன்
ஆண் : சொல்லிக் கொண்டேன் சொல்லிக் கொண்டேன்
என் மனதில் சொல்லிக் கொண்டேன்
ரகசியமாய் என்னுள்ளே
உன் பேரை சொல்லிக் கொண்டேன்
ஆண் : நெஞ்சுக்குள் ஆயிரம்
பூ பூக்கும் வாசனை
எப்போதும் என்னுள்ளே
பெண்ணே உன் யோசனை
மனதில் விழுந்த
முதல் மழை நீயடி……
ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..