பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓஒ….ஓஒ….ஓஒ…..ஓஒ…..ஓஒ…
ஓ….ஓஒ……ஓஒ……ஓ….ஓஒ……ஓஒ…..ஓ…..
ஆண் : காலம் கலிகாலம்
இது தானம்மா…
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா…..
ஆண் : இல்வாழ்வே போராட்டம்
கடை வீதி வியாபாரம்
இதில் உறவு ஏனம்மா பாவமே
ஆண் : காலம் கலிகாலம்
இது தானம்மா
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா
ஆண் : பந்தம் அதில் பாசம்
அது இந்த நாளில் ஏது
ஓஓ…ஓ…..ஓஒ……
ஆண் : தேவை வரும் நேரம்
பெற்ற பிள்ளை மாறும் போது
காசு தானடா உலகை ஆளுது
தர்மம் இங்குதான் இருளில் தூங்குது
ஆண் : சம்சாரமே பாரம்தான்….
சொந்தங்களே வேஷம்தான்…..
உன் தேவையே தர்மமா….
நீ கேட்பதே நியாயமா…..
ஆண் : ஓ மனிதனே மனிதனே
வீண் கனவு ஏன்
ஆண் : காலம் கலிகாலம்
இது தானம்மா……
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா……
ஆண் : தாயின் மனம் பித்து அதில்
பிள்ளை மனது கல்லு
ஓஓ…ஓ…..ஓஒ……
ஆண் : தந்தை மறைந்த போதும் அதில்
வந்த செல்வம் இன்பம்
அன்பு என்பது துன்பம் ஆனது….
ஆசை என்பது அரங்கில் ஏறுது…..
ஆண் : உன் வாரிசே வைரியா…..
உன் உதிரமே எதிரியா…..
உன் குங்குமம் அழிந்துதான்…..
உன் பிள்ளைகள் வாழுமா…..
ஆண் : ஓ மனிதனே மனிதனே
வீண் கனவு ஏன்
ஆண் : காலம் கலிகாலம்
இது தானம்மா…..
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா……
ஆண் : இல்வாழ்வே போராட்டம்
கடை வீதி வியாபாரம்
இதில் உறவு ஏனம்மா பாவமே
ஆண் : காலம் கலிகாலம்
இது தானம்மா…..
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா…..