பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை } (2)
ஆண் : காலங்களில்
அவள் வசந்தம்
ஆண் : பறவைகளில்
அவள் மணி புறா
பாடல்களில் அவள்
தாலாட்டு
ஆண் : ………………….
ஆண் : பறவைகளில்
அவள் மணி புறா
பாடல்களில் அவள்
தாலாட்டு
ஆண் : { கனிகளிலே
அவள் மாங்கனி } (2)
காற்றினிலே அவள்
தென்றல்
ஆண் : காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை
ஆண் : காலங்களில்
அவள் வசந்தம்
ஆண் : { பால்போல்
சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல்
அணைப்பதில் கன்னி } (2)
ஆண் : { கண்போல்
வளர்ப்பதில் அன்னை } (2)
அவள் கவிஞன்
ஆக்கினால் என்னை
ஆண் : காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை
ஆண் : காலங்களில்
அவள் வசந்தம்