பாடகி : சின்மயி
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
பெண் : இதுவரை நான்
இதுபோல் இல்லை
இனி என்ன நான்
செய்வேன் என்னை
பெண் : என் வசம்
நான் ஏன் இன்று
இல்லை நடப்பதெல்லாம்
கற்பனை இல்லை
பெண் : யார் என்ன
செய்தார் என்னை
காரணம் வேறேதும்
இல்லை நீ வா வா
நீ வா
பெண் : முழுவதுமாய்
உன்னை வெறுத்தேன்
அதில் இருந்தே நான்
உன்னை ரசித்தேன்
பெண் : முகம் கண்டாலுமே
கோபங்கள் கொண்ட நான்
உன் பெயர் சொன்னாலும்
ஏன் புன்னகை பூக்கிறேன்
பெண் : எவர் முன்னாலுமே
ஆணைப்போல் நின்ற நான்
உன்னிடம் பெண்ணாகியே
வெட்கம் ஏன் சிந்தினேன்
பெண் : வானம் தூறல்
தருதே வாழும் ஆசை
வருதே நீதான் எந்தன்
அருகில் வா வா நீ வா
பெண் : முழுவதுமாய்
உன்னை வெறுத்தேன்
அதில் இருந்தே நான்
உன்னை ரசித்தேன்
பெண் : கணம் போகாமலே
தனிமையில் நின்ற நான்
இக்கணம் போதாமலே
தேடல் ஏன் கொள்கிறேன்
பெண் : உன்னை
எண்ணாமலே விலகியே
சென்ற நான் இன்றுன்னை
காணும் வரை இப்படி
தவிக்கிறேன்
பெண் : நொடிகள் தீர்ந்து
போகும் உன்னை நான்
சேர வேண்டும் உடனே
எந்தன் அருகில் வா வா
நீ வா
பெண் : முழுவதுமாய்
உன்னை வெறுத்தேன்
அதில் இருந்தே நான்
உன்னை ரசித்தேன்