பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
பெண் : கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம் உறங்கவில்லையே
என் ராஜாதி ராஜன் இருந்தா
நான் வேறேதும் கேக்கவில்லையே
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவை இல்லையே…….
பெண் : என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
ஆண் : ஓஓஹோ ஒஓஹோ
ஓஓஹோ ஒஓஹோ
ஓஓஒ ஓஓ ஒஓஹோ
பெண் : உன் மேல ஆச வச்சு
உள்ளுக்குள்ள பாசம் வச்சு
ஆளான அன்னக்கிளி நான்…..
பெண் : பூ மால கோத்து வச்சு
போட ஒரு வேள வச்சு
போடாம காத்திருக்கேன் நான்…..
பெண் : வேண்டாத சாமி இல்ல
வேற வழி தோணவில்ல
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்
பெண் : போடாத வேலி ஒண்ணு
போட்டு வெச்ச நேரம் ஒண்ணு
பாடாத சோகம் ஒண்ணு
பாடி வரும் பொண்ணு ஒண்ணு
பெண் : என் ராகம் கேட்கவில்லையா
மாமா இன்று
ஏதாச்சும் வார்த்த சொல்லய்யா
பெண் : என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
பெண் : பொன்னான கூண்டுக்குள்ள
பூட்டி வெச்ச பச்சக் கிளி
கண்ணீரு விட்டுக் கலங்கும்……ம்ம்ம்….
பெண் : கண்ணான மாமன் எண்ணம்
காட்டாறு போல வந்து
எப்போதும் தொட்டு இழுக்கும்….ம்ம்ம்…..
பெண் : உன்ன எண்ணி நித்தம் நித்தம்
ஓடுதையா பாட்டுச் சத்தம்
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்
பெண் : ஒத்தையில பூங்கொலுசு
தத்தளிச்சு தாளம் தட்ட
மெத்தையில செண்பகப்பூ
பாட்டுக்குள்ள சோகம் தட்ட
பாடாம பாடும் குயில் நான்
மாமா உன்ன
கூடாம வாடும் மயில் நான்
ஆண் : என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
என் ராசாத்தி பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவை இல்லையே…….
பெண் : என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே