பாடகர் : பி. பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
ஆண் : கல்லிருக்கும் முள்ளிருக்கும்…
கருநாகப் பாம்பிருக்கும்…
தொல்லை தரும் பூமியிலே…
தூய மனம் கொண்டவளே…
ஆண் : எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
ஆண் : எங்கே செல்கின்றாய் அப்பா
எங்கே செல்கின்றாய்
எங்கே செல்கின்றாய் அப்பா
எங்கே செல்கின்றாய்
ஆண் : எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
ஆண் : அழுகின்றாயா அழுது விடு
அலைகின்றாயா அலைந்து விடு
அழுகின்றாயா அழுது விடு
அலைகின்றாயா அலைந்து விடு
மழலை சுமந்த மயிலே உலகில்
மழலை சுமந்த மயிலே உலகில்
கருணையை மட்டும் மறந்து விடு
ஆண் : எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
ஆண் : வாளும் வலிவும் இருந்தாலும்
உன் மனதினில் உறுதி நிறைந்தாலும்
வாளும் வலிவும் இருந்தாலும்
உன் மனதினில் உறுதி நிறைந்தாலும்
சூழும் வஞ்சக சூழ்ச்சியில் உந்தன்
சூழும் வஞ்சக சூழ்ச்சியில் உந்தன்
தோளும் வாளும் என் செய்யும்
ஆண் : எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
ஆண் : கோட்டை இருந்தும் அரசில்லை…
கொஞ்சும் கிளியிடம் மொழி இல்லை…
பாடல் பிறந்தும் இசை இல்லை…
வளர் பாவை உனக்கும் துணை இல்லை
ஆண் : எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
ஆண் : ஒவ்வொரு இரவும் விடியுமடா
ஒவ்வொடு தடையும் அழியுமடா
உள்ளத் துணிவும் முயற்சியும் கொண்ட
உத்தம வாழ்வும் மலருமடா…
ஆண் : கண்ணிலே காண்பதெல்லாம்
கவலைகளாய் வளர்ந்தாலும்
உண்மை மலரும் ஒளி பிறக்கும் கலங்காதே…