பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சந்திர போஸ்
ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
மகராசி போல் நீ வாழனும்
உன் வாழ்வது தேனாகனும் ஹோய்
பெண் : என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பூமாலை நீ சூடனும்
தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய்
ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
ஆண் : பாதையை நீ மாத்திவிடு
உன் பயணத்தை நீ தொடங்கிவிடு
பெண் : போகும் வழி தெரியவில்லை
போகும் இடம் அதுவும் புரியவில்லை ஹோய்..
என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
ஆண் : பார்வையிலே தெளிவிருந்தா
பாதையென அறிஞ்சிடலாம் ஆஆ
நேர்மையெனும் வழி நடந்தா
சேரும் இடம் அதை புரிஞ்சிடலாம்
பெண் : கண் வீசும் வேளையிலே
உன் விழியத் தேடுகிறேன்
உன் நினைவின் இனிமையிலே
நாள் தோறும் வாழுகிறேன் ஹோய்
ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
பெண் : அவ பிரிவை நீ மறந்திடனும்
என்னை நீ மணந்திடனும்
காலம் உண்டென்று வாழ்ந்திடனும்
என் ஆசை அது நிறைவேறனும்
ஆண் : உன் ஆசையில தப்புமில்ல
உன்னோடு நான் சேர வழியுமில்ல
மனசை நீ மாத்திக்கனும்
என்னை நீ மறந்திடனும் ஹோய்
ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
மகராசி போல் நீ வாழனும்
உன் வாழ்வது தேனாகனும் ஹோய்
பெண் : என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பூமாலை நீ சூடனும்
தினம் பாமாலைதான் நான் பாடனும் ஹோய்
ஆண் : என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்