டிங் டாங்
கோயில் மணி
கோயில் மணி
நான் கேட்டேன்.
உன் பேர்
என் பெயரில்
சேர்ந்தது போல்
ஒலி கேட்டேன்.
நீ கேட்டது
ஆசையின் எதிரொலி
ஆ.. ஆ.. நீ தந்தது
காதலின் உயிர்வலி!
சரணம் 1
சொல்லாத காதல் சொல்ல
சொல்லாகி வந்தேன்
நீ பேச இமை நீ பேச!
சொல் ஏது
இனி நான் பேச!
கனவுகளே.. கனவுகளே
பகலிரவாய் நீள்கிறதே!
இதயத்திலே உன்நினைவு
இரவுபகல் ஆழ்கிறதே!
சற்று முன்பு நிலவரம்
எந்தன் நெஞ்சில் கலவரம்..
கலவரம்..!
சரணம் 2
புல் தூங்கும் பூவும் தூங்கும்
புதுக் காற்றும் தூங்கும்
தூங்காதே நம் கண்கள்தான்!
ஏங்காதே
இது காதல்தான்!
பிடித்த நிலா பிடிக்கவில்லை
பிடிக்கிறது உன்முகம்தான்
இனிக்கும் இசை இனிக்கவில்லை
இனிக்கிறது உன்பெயர்தான்!
எழுதி வைத்த சித்திரம்
எந்தன் நெஞ்சில் பத்திரம்..
பத்திரம்..!