பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்
பெண் : தேவி ஸ்ரீதேவி
தேவி ஸ்ரீதேவி லாலி சுப லாலி
தங்கமகள் மகாலட்சுமியோ
தங்கமகள் மகாலட்சுமியோ
திருமேனி மஞ்சள் நிலா வண்ணமோ
தோகை மயிலென உலா வந்ததோ
பெண் : மகளே உன்னை கண்டேன்
மடியினில் பொன்னைக் கண்டேன்
நான் எதிர்ப்பார்த்த வாழ்வும் இங்கே வந்தது
தாயின் விழிகளில் இன்பம் தந்தது
பெண் : மகளாய் குலமகளாய்
மதுரையில் வளர் மீனாள் வந்தாள்
மணித் தமிழ் மூன்றும்
இனிய மழலையானதோ
பெண் : மழையாய் அருள் பொழியும் விழிகளில்
இரு மீன்கள் கொண்டாள்
வலம் வரும் தாயின்
இதயம் வைகை ஆனதோ
பெண் : கரும்பு வில் சுமந்திடும்
காஞ்சி காமாட்சியோ
மறைகளும் புரிவது அவளது ஆராய்ச்சியோ
அவள்தான் இவளோ
இவளுக்கு பொன்னூஞ்சலோ
வாழ்வும் இங்கே வந்தது
தாயின் விழிகளில் இன்பம் தந்தது….
பெண் : தேவி ஸ்ரீதேவி லாலி சுப லாலி
தங்கமகள் மகாலட்சுமியோ
திருமேனி மஞ்சள் நிலா வண்ணமோ
தோகை மயிலென உலா வந்ததோ….
பெண் : கருமாரி அன்னையின் உருவமும் நீயோ
திருவேற்காட்டில் எழுந்தருள்வாயோ
எனக்கான மடியிலே தோன்றிய சேயோ
தரணியில் நானும் தாய்க்கொரு தாயோ
பெண் : முருகனை பேச வைத்தவள் நீயோ
கொல்லூர் வாழும் மூகாம்பிகையோ
சங்கரன் போற்றும் தேவியும் நீயோ
சகலரும் ஏற்கும் பகவதி தாயோ
பெண் : அவள்தான் இவளோ
இவளுக்கு பொன்னூஞ்சலோ
வாழ்வும் இங்கே வந்தது
தாயின் விழிகளில் இன்பம் தந்தது
பெண் : தேவி ஸ்ரீதேவி லாலி சுப லாலி
தங்கமகள் மகாலட்சுமியோ
திருமேனி மஞ்சள் நிலா வண்ணமோ
தோகை மயிலென உலா வந்ததோ….