பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : ஆ…..ஆஅ…..ஆ…..அஹஹா
ஓஒ….ஓஓ…..ஓஹோ…..ஓஒ….
ஹோ…..ஒ….ஒ…லால்ல லா
லா லா லா லால்ல லா
பெண் : அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்
அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்
ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன
ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன
நோட்டம் என்னென்ன……
அதில் நாட்டம் என்னென்ன
பெண் : அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்……..
பெண் : தோட்டத்துப் பழத்துக்குக் கிளிப்பார்வை
என் தோள்களில் விழுந்தது பசிப் பார்வை
தோட்டத்துப் பழத்துக்குக் கிளிப்பார்வை
என் தோள்களில் விழுந்தது பசிப் பார்வை
பெண் : ஆசைக்கு வெட்கமில்லை
ஓரப்பார்வை பார்க்கிறார்
அத்தை மகள் வந்ததைப்போல்
அன்னத்தின் மேனிக் கண்டு ஜாடை செய்கிறார்
பெண் : அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்……..
பெண் : போதையில் ஊறிய விழி அங்கே
பூஜையை நாடிடும் மலர் இங்கே
போதையில் ஊறிய விழி அங்கே
பூஜையை நாடிடும் மலர் இங்கே
பெண் : மாலைக்கு ஆசைக் கொண்ட
மங்கையிவள் இல்லையா
மன்னர்களே பெண்ணிடத்தில்
தேவியின் கோலம் காணும் தேவன் இல்லையா
பெண் : அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்……..
ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன
நோட்டம் என்னென்ன……
அதில் நாட்டம் என்னென்ன
பெண் : அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்……..