பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆஆஆ
ஆஆஆ…………
பெண் : { அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி } (2)
பெண் : { வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல்
தோகை ஏதடி } (2)
பெண் : அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி
பெண் : { கண்கள் சரவணன்
சூடிடும் மாலை கன்னங்கள்
வேலவன் ஆடிடும் சோலை } (2)
பெண் : { பெண்ணென
பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல்
வேறென்ன வேலை } (2)
பெண் : { நெஞ்சே தெரியுமா
அன்றொரு நாளிலே } (2)
பெண் : நிழலாடும்
விழியோடும் ஆடினானே
அன்று நிழலாடும் விழியோடும்
ஆடினானே என்றும் கண்ணில்
நின்றாட சொல்லடி
ஆண் : …………………………..
பெண் : …………………………..
ஆண் : { மலையின்
சந்தனம் மார்பின்
சொந்தம் மங்கையின்
இதயமோ காளையின்
சொந்தம் } (2)
பெண் : { நிலையில்
மாறினால் நினைவும்
மாறுமோ நெஞ்சம்
நெருங்கினால் பேதங்கள்
தோன்றுமோ } (2)
ஆண் : { காலம்
மாறினால் காதலும்
மாறுமோ } (2)
பெண் : மாறாது
மாறாது இறைவன்
ஆணை
ஆண் & பெண் : என்றும்
மாறாது மாறாது இறைவன்
ஆணை
ஆண் : { இந்த சிவகாமி
மகனுடன் } (2)
சேர்ந்து நில்லடி இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
ஆண் : வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
தோகை இல்லாமல்
வேலன் ஏதடி
பெண் : …………………………..
பெண் : { அந்த சிவகாமி
மகனிடம் } (3)
சேதி சொல்லடி என்னை
சேரும் நாள் பார்க்க
சொல்லடி