பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்……
பெண் : ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்
ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்
பெண் : தழுவாத கைகளில் தவழாத மாங்கனி
இவள் போல ஏங்குதே இந்நேரமே
தழுவாத கைகளில் தவழாத மாங்கனி
இவள் போல ஏங்குதே இந்நேரமே
பெண் : தவிக்கின்ற காதலி தனியாக ஏங்கினாள்
பசி தாகம் இன்றியே தூங்காமல் தூங்கினாள்
மேகம் நிலாவை ஓயாமல் கூடும்
மோகம் விடாமல் ஆடாமல் ஆடும் ஆடும்
பெண் : ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்…
பெண் : உறங்காமல் என் விழி உனைத் தேடி போகுதே
உணர்வென்ற வேதனை எனை வாட்டுதே
உறங்காமல் என் விழி உனைத் தேடி போகுதே
உணர்வென்ற வேதனை எனை வாட்டுதே
பெண் : உனக்காக பூத்தவள் ஒரு காதல் பைங்கிளி
தேயாமல் தேய்ந்ததே அவள் பேசும் தேன்மொழி
சேராத ஆறு கடல் சேர வேண்டும்
நீ சேரும் காதல் நீங்காத மோகம் பாடும்
பெண் : ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்
ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்