பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர்
ஆண் : ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவி முகமோ
இளமை பாடும் காதலின் கதை
நான் எழுதும் கவிதை வந்ததோ
பெண் : ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவன் முகமோ
இளமை பாடும் காதலின் கதை
நீ எழுதும் கவிதை வந்ததோ
பெண் : உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது
உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது
ஆண் : பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம்
சூடான தேகத்தில் சேரும் ஈரந்தான்
பெண் : தூது போகும் பேதை மனங்களில்
பாடும் வானம்பாடி நீயோ
ஆண் : ராக தேவன் கோயில் மணிகளில்
சூடும் காதல் கிரீடம் நீயோ
மீன்…வலை…விழியோ…..
பெண் : ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவன் முகமோ
ஆண் : இளமை பாடும் காதலின் கதை
நான் எழுதும் கவிதை வந்ததோ
ஆண் : பாதம் வந்து போகும் வழிகளில்
பூவில் பாதை போடலாமா
பெண் : போகும் பாதை யாவும் அழகிய
தேகமாக மாறலாமா
நான்…துணை…வரவோ…..
பெண் : காதல் நோயில் வாடும் மனதினை
கைகள் வந்து காக்க வேண்டும்
ஆண் : கைகள் வந்து காக்கும் இடங்களை
நானும் இங்கு பார்க்க வேண்டும்
தேன்…மழை…விழுமோ
பெண் : ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவன் முகமோ
ஆண் : இளமை பாடும் காதலின் கதை
நீ எழுதும் கவிதை வந்ததோ..
பெண் : வந்ததோ…
ஆண் : லால லாலால பெண் : லாலால லா…….(3)