நீண்ட கருகருவென கூந்தலை பெற

Sep 23, 2021 - 07:12
 0  248
நீண்ட கருகருவென கூந்தலை பெற

பொதுவாக எல்லா பெண்களுக்குமே கூந்தல் கரு கருவென இருக்க வேண்டும் என்ற ஆசையுள்ளது.

இன்று இளநரையை மறைப்பதற்காக பலரும் பல கெமிக்கல் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதுண்டு. இது முடியின் இயற்கை அழகினை கெடுத்துவிடுகின்றது.

அந்தவகையில் இந்த பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட இயற்கையாக கிடைக்கும் மருதாணி இலைகளை வைத்து முடி வளர்ச்சியை துண்ட முடியும்.

தற்போது முடியினை கருகருவெ வளர செய்ய மருதாணி இலை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
  • ஹென்னா இலைகள்
  • 500 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய்
தயாரிக்கும் முறை

ஹென்னா இலைகளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

எனவே அதிகளவு தண்ணீர் ஊற்ற வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றினாலே போதும்.

நெல்லிக்காய் வடிவில் அரைத்த பேஸ்ட்டை உருட்டிக் கொள்ளுங்கள். அதை நன்றாக காய வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் 500 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்

இப்பொழுது ஹென்னா பேஸ்ட் பந்துகளை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைக்கவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow