திருக்குறள் - அதிகாரம் இடுக்கணழியாமை
- 
Showing  1  -  10  of  10
- 
  இடுக்கண் வருங்கால் நகுக அதனை
 அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
- 
  வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
 உள்ளத்தின் உள்ளக் கெடும்.
- 
  இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
 இடும்பை படாஅ தவர்.
- 
  மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
 இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
- 
  அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
 இடுக்கண் இடுக்கட் படும்.
- 
  அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
 ஓம்புதல் தேற்றா தவர்.
- 
  இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
 கையாறாக் கொள்ளாதாம் மேல்.
- 
  இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
 துன்பம் உறுதல் இலன்.
- 
  இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
 துன்பம் உறுதல் இலன்.
- 
  இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
 ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
 
 
 
 
 
                                             
                                             
                                             
                                            