மாடித் தோட்டம் பீன்ஸ் பயிரிடும் முறை

மாடித் தோட்டம் பீன்ஸ் பயிரிடும் முறை

Mar 14, 2020 - 04:00
 0  361
மாடித் தோட்டம் பீன்ஸ் பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் பீன்ஸ் பயிரிடும் முறையை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

  1. Grow Bags அல்லது Thotti
  2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  3. விதைகள்
  4. நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

பீன்ஸ் செடிகளை வளர்க்க சிறிய அளவிலான தொட்டிகள் அல்லது பைகளை பயன்படுத்தலாம்.

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு விதைக்க வேண்டும்.

செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

விதைத்தல்

தரமான விதைகளை தேர்வு செய்து விதைக்க வேண்டும். தொட்டிகளின் அளவைப் பொறுத்து 3 முதல் 5 விதைகள் வரை ஊன்றலாம். விதையை சிறிது ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகளை ஊன்றிய உடன் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பஞ்சக்காவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளிக்கலாம். மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம். காய் கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் ஆகியவற்றை செடிகளுக்கு ஊற்றலாம்.

பாதுகாப்பு முறைகள்

செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒரு முறை கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது.

வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய் 3 மிலி (ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்கும்போது பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.

அறுவடை

காய்களை முற்றுவதற்கு முன் இளம் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்:

  • பீன்ஸ் வேகவைத்த நீரில் முகத்தை கழுவும் பொழுது முகம் பளபளக்கும்.
  • தொண்டைப்புண்,இருமல் மற்றும் கைகால் நடுக்கத்தை கட்டுப்படுத்தும்.
  • நீரிழிவு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சக்தி பீன்ஸ்க்கு உண்டு.
  • இதயஅடைப்பு மற்றும் தேவை இல்லாமல் ரத்த நாளங்களில் சேரும் கொழுப்பை கரைக்கவும் பீன்ஸ் உதவுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow