பாடகி : ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : தினா
பெண் : ஓஓஹ்ஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்….
பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ
என்னுயிரே மண்ணுலகில் எனது
இரண்டாம் தாயல்லவோ
பெண் : சிறகடிக்கும் சிறு கிளியே
இந்த மனம் நந்தவனமல்லவோ
இறைவன் வகுத்த பந்தமல்லவோ
வெண்ணிலவே வெண்ணிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ…
பெண் : மான் வேண்டுமா
வெள்ளி மீன் வேண்டுமா
உனக்காக வலை விரிப்பேன்
ஓஹோஹோ
பல்லாங்குழி நீயும் விளையாடவே
வைரக்கல் வரவழைப்பேன்
பெண் : சுகம் சுகம் தரும் என் சுகந்தமும் நீ
வசம் வசம் வரும் வரும் பொன் வசந்தமும் நீ
என் கண்மணிக்குள் உன்
உருவம் செதுக்கி வைப்பேன் ஓஓஹோ
பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ…
பெண் : கல்லாகவே நின்ற என் நெஞ்சிலே
பூ ஒன்று வேர் விட்டது ஓஓஹோ
தாயாகவே இன்று என் மார்பிலே
பாசத்தின் பாலூறுது
பெண் : நிறம் நிறம் பெறும் பெரும்
என் நினைவுகளே
வரம் வரம் தரும் தரும் உன் கனவுகளே
என் உயிரையும் உயிலாக எழுதி வைப்பேன்
ஓஓஹ்ஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்….
பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ
என்னுயிரே மண்ணுலகில் எனது
இரண்டாம் தாயல்லவோ
பெண் : சிறகடிக்கும் சிறு கிளியே
இந்த மனம் நந்தவனமல்லவோ
இறைவன் வகுத்த பந்தமல்லவோ