பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே……..
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே……..
ஆண் : விழியோ கார்த்திகை தீபம்
ஒளி நான் வா வா என்றது
உனக்கா என்னிடம் கோபம்
அதுதான் ஏன் ஏன் வந்தது
ஆண் : அடிக்கும்போது மிருகமடா
அணைக்கும்போது மனிதனடா
தெய்வம் நீயடா
மனத் தேரில் ஏறி வா ராஜா………
ஆண் : வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே……..
ஆண் : உனக்கேன் வாய்மொழி ஒன்று
அதுதான் தான் நான்தான் அல்லவோ
மடிமேல் தூங்கடா வந்து
மனத்தால் தாய் நான் அல்லவோ
ஆண் : விரலில் என்ன அபிநயமோ
விழியில் என்ன கவி நயமோ
அன்பின் தீபமே இன்னும்
ஆண்டு நூறு நீ வாழ்க…….
ஆண் : வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே……..