பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : ஷியாம்
ஆண் : வா வா ஆடி வா…..
வா வா ஆடி வா…..
காதோரம் தவழும் பூபாளம் இனிக்கும்
தீயான விழிகள் பூவாக இழுக்கும்
மது வசந்தம் புது மயக்கம் சிறு சலங்கை
மணிக் குரல் தரும் மயில் இவள்….
வா வா ஆடி வா…..
ஆண் : காவேரி ஓடி காலோடு ஆடும்
கண்ணோடம் ரெண்டும் தாளங்கள் வளர்ந்திடுமோ
கையோடு பாவம் காலத்தை வெல்லும்
கல் கூட இங்கே ராகங்கள் இசைத்திடுமோ
ஆண் : வளர்பிறையில் பனித்துளிப் போல்
இளம் வியர்வை துடிதுடிக்கும்
உடல் முழுதும் மலர் சிரிக்கும்
நடை கொடியினில் இவள் உயிர் மலரோ…..
ஆண் : சுருக்கம் பிறக்கும் வரை
ஒருத்தி சிரித்து வர
போதை காதல் பார்வை கவிதை
உலாவும் நிலாவே உல்லாசம் ஆயிரம்
ஆனந்தம் நீந்திடும் அழகிய சுகம்……
ஆண் : வா வா ஆடி வா…..
உன்னை அழைத்தேன்
வா வா ஆடி வா…..
ஆண் : காதல் தரும் தேவி வரும் காமபாணம் கோடி
மேகங்கள் தீபங்கள் ஏந்தும் பொன்மாலை
இளந்தென்றல் தேரில் இரவென்னும் ஊரில்
விளையாடும் நேரமே
ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….ஆ….
விழி மூடும் கோலமே
ஆண் : ……………………..
ஆண் : இளமை இனிமை தர இதயம் புதுமை பெற
பாடுதே ஆடுதே இளம்பருவம்
இணைத்து இனிக்கவா அணைத்து எடுக்கவா
எடுத்து கொடுக்கவா…..
வா……வா……ஆடி வா…..
வா வா ஆடி வா…….
ஆண் : வா வா ஆடி வா……..
உன்னை அழைத்தேன்
வா வா ஆடி வா…..