பாடகர் : எ.எம். ராஜா
இசையமைப்பாளர் : எ.எம். ராஜா
ஆண் : உன்னை
கண்டு நான் வாட
என்னை கண்டு நீ
வாட கண்ணீரும்
கதை சொல்லும்
தீபாவளி
ஆண் : ஊரெங்கும்
மணக்கும் ஆனந்தம்
நமக்கு காணாத தூரமடா
காணாத தூரமடா
ஆண் : { நெஞ்சமும்
கனலாகி நீராகும்
போது நிம்மதி என்
வாழ்வில் இனி ஏது } (2)
ஆண் : கொஞ்சிடும்
மொழி கேட்டு மகிழ்ந்தவள்
எங்கே கொஞ்சிடும் மொழி
கேட்டு மகிழ்ந்தவள் எங்கே
ஆண் : குளத்தின்
விளக்காய் திகழ்ந்தவள்
எங்கே கண்ணுக்குள்
நடந்த காட்சிகள் எல்லாம்
கனவாகி போனதடா
கனவாகி போனதடா
ஆண் : { ஆசைக்கு
அணை போட்ட
அறிவான நங்கை
அன்புக்கு பொருள்
சொன்ன அருள் மங்கை } (2)
ஆண் : பாசத்தின்
சுமையோடு பறந்து
சென்றாலே பாசத்தின்
சுமையோடு பறந்து
சென்றாலே
ஆண் : பழகும்
உன்னையும் மறந்து
சென்றாலே கண்டதும்
நினைவில் கொண்டதும்
முடிவில் கதையாகி
போனதடா கதையாகி
போனதடா