பாடகர் : சந்தோஷ் ஜெயகரன்
இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : நான் புரவியில் ஏறி
வருகிற வழியில்
ஆயிரம் அருவிகள் சிரித்திடுமே
என் புன்னகை என்னும்
திறவியினாலே
பூட்டிய கோட்டைகள் திறந்திடுமே
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : தமிழ் மணம் வீசும் காற்றினிலே
அறிவும் அழகும் பொங்கிடுமே
தமிழைப் பேசும் நாவினிலே
இனிமைதானே தங்கிடுமே..
ஆண் : {வள்ளுவன் குறளும்
அவ்வையின் குரலும்
பாதை வகுத்திடும்போது
வானம் விழுந்தினும்
தடைகள் எழுந்தினும்
மனதினில் அச்சம் ஏது?…} (2)
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : வீரம் எனது ஆடையில்லை
உதிரம் என்றே சொல்வேனே
மானம் எந்தன் கவசமில்லை
உயிராய் சுமந்தே செல்வேனே
ஆண் : {ஒவ்வொரு நொடியும்
வைரம் என்றால்
காலம் புதையல்தானே..
ஒவ்வொரு உள்ளமும்
அரியணை என்றால்
நிரந்தர அரசன் நானே} (2)
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்