பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
ஆண் : தன்னைத் தானே மறந்திருந்தாள்
உன்னை ஈன்ற அன்னை
தன்னைத் தானே மறந்திருந்தாள்
உன்னை ஈன்ற அன்னை
திரும்பி வந்த நினைவிருந்தும்
மறந்ததென்ன என்னை
திரும்பி வந்த நினைவிருந்தும்
மறந்ததென்ன என்னை
ஆண் : இமையை விழிதான் மறப்பதுண்டோ
காட்சி வந்த பின்னே
இமையை விழிதான் மறப்பதுண்டோ
காட்சி வந்த பின்னே
எனது நிலையை எடுத்துச் சொல்ல
தூது போ என் கண்ணே
எனது நிலையை எடுத்துச் சொல்ல
தூது போ என் கண்ணே
ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
ஆண் : கண்ணன் வந்தான் நண்பனுக்கு
தேரோட்ட அன்று
கண்ணன் வந்தான் நண்பனுக்கு
தேரோட்ட அன்று
தந்தை வந்தான் பிள்ளைக்காக
காரோட்ட இன்று
தந்தை வந்தான் பிள்ளைக்காக
காரோட்ட இன்று
ஆண் : வானில் உள்ள தேவன்
இந்த விந்தை கண்டு சிரிப்பான்
வானில் உள்ள தேவன்
இந்த விந்தை கண்டு சிரிப்பான்
வாழ்ந்து பார்க்க வேளை வந்தால்
நம்மை ஒன்று சேர்ப்பான்
வாழ்ந்து பார்க்க வேளை வந்தால்
நம்மை ஒன்று சேர்ப்பான்
ஆண் : தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே
தாலாட்டிலே ம்ம்….ம்ம்…..ம்ம்…..ம்ம்……