பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தாலாட்டு கேக்காத பேர்
இங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல்
வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு
நம் தாய் போலே இங்கு வேறாரு…..
ஆண் : தாலாட்டு கேக்காத பேர்
இங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல்
வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
ஆண் : ஆவாரம் காடெல்லாம்
நீரோடும் தோப்பெல்லாம்
யாராரு வேலை செய்வதாரு
பூவாரம் கேட்டானா
பொன்னாரம் கேட்டானா
சோறுக்கு வேண்டி நிக்கும் தேரு
ஆண் : பொன் மின்ன வெள்ளி மின்ன
வைரங்கள் மின்ன
தொழிலாளி கைகள் படத்தான் வேணும்
ஆண் : தாய் உண்ண சேயும் உண்ண
நாமென்றும் உண்ண
விவசாயிதான் உழைக்க வேணும்
ஏழை அவர்பாடு அது காற்றோடு போயாச்சு
ஆண் : ஏரோட்டி போனாலே
எல்லோர்க்கும் சோறு
தோள் கேட்டு போவானே
அவன் பாடும் பாட்டு
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
கூ…..கூ….கூக்கு…….
கூ…..கூ….கூக்கு…….
ஆண் : நாடாளும் பேர் என்ன
மாடோட்டும் பேர் என்ன
யாராரு ஒன்னப் பெத்ததாரு….
விஞ்ஞானி ஆனாலும்
மெய்ஞானி ஆனாலும்
தாய்தானே பெத்துப் போட்டா கூறு
ஆண் : பகல் என்ன இரவும் என்ன
என்றென்றும் இங்கே
ஆணுக்குப் பெண்ணின் துணை வேணும்
ஆண் : வெயில் என்ன மழையும் என்ன
காலங்கள் தோறும்
அன்புக்குத் தாயும் இங்கே வேணும்
தாய்தான் படும்பாடு
அதை உணர்வாயே கண்மணி
ஆண் : தாலாட்டு கேக்காத பேர்
இங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல்
வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு
நம் தாய் போலே இங்கு வேறாரு…..