பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆ……ஆ…..ஆ……ஆ….
ஆ……ஆ…..ஆ……ஆ….
ஆ……ஆ…..ஆ……ஆ….
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்ச் செல்வமே கலை தெய்வமே
பொருட்ச் செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில்
அருள் செய்ய வா
ஆண் : மானைப் போல கண்கள் ரெண்டும் எனைப் பார்க்குமா
வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா
வீணை தரும் நாதம் துணையாகுமா
இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ…
ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
ஆண் : கோயில் வாசல் தேடித் தேடி அலை பாய்ந்ததே
தேவ தேவி உன்னை எண்ணி மனம் ஓய்ந்ததே
இங்கே உன்னைக் கண்டேன் நல்ல நேரமே
இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ…
ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
ஆண் : கண்டகமணி ஓசை பொங்க
தண்டை தனது தாளம் கொஞ்ச
ஆண் : மிருதுவான மேனியோடும்
அமுதமான ஜாடையோடும்
ஆண் : இளைய தோகை அழகு மங்கை
இனிய ராகம் பாடி ஆடி
ஆண் : திரண்டு குலுங்கும் இரண்டு
கோவை போன்ற இதழ்களோடும்
சிறந்ததொரு விருந்து என
துணை வருவது அது தருவது
ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்ச் செல்வமே கலை தெய்வமே
பொருட்ச் செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா..