பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : சொந்தம் பதினாறு உண்டு
கூட உறவாட
யாரும் இல்ல கையெழுத்து போட
ஆண் : சொந்தம் பதினாறு உண்டு
கூட உறவாட
யாரும் இல்ல கையெழுத்து போட
உண்மையிலே இங்கே
ஒரு சொந்தமுன்னு சொல்ல
சட்டப்படி பாத்தா
ரத்த சம்பந்தங்கள் அல்ல
ஒரு ஜீவன் அலை பாய
ஆண் : சொந்தம் பதினாறு உண்டு
கூட உறவாட
யாரும் இல்ல கையெழுத்து போட
ஆண் : அன்னை வழி தந்தை வழி
அத்தை வழி மாமன் வழி
வந்ததுதான் சொந்தம் என்று
யார் சொன்னதப்பா
ஆண் : அன்பு கொண்ட உள்ளம் எல்லாம்
நேசம் வச்ச நெஞ்சம் எல்லாம்
சொந்தத்திலும் சொந்தம் என்று
ஊர் சொல்லுமப்பா
ஆண் : எந்நாளுமே இங்கு நல்ல மனம்
உள்ள எல்லாருமே ஒரு சாதி சனம்
கண்ணீரில் பாசங்கள் இந்நேரம் நீராட
தெய்வம்தான் கண் பார்க்க கையேந்தி போராட
ஆண் : சொந்தம் பதினாறு உண்டு
கூட உறவாட
யாரும் இல்ல கையெழுத்து போட
உண்மையிலே இங்கே
ஒரு சொந்தமுன்னு சொல்ல
சட்டப்படி பாத்தா
ரத்த சம்பந்தங்கள் அல்ல
ஒரு ஜீவன் அலை பாய
ஆண் : சொந்தம் பதினாறு உண்டு
கூட உறவாட
யாரும் இல்ல கையெழுத்து போட
ஆண் : போட்டதொரு நாடகம்தான்
பெண் ஒருத்தி காரணம்தான்
மேளம் கொட்டி மாலை இடும்
நாள் வந்திடணும்
ஆண் : மாமன் போட்ட கையெழுத்தில்
மாப்பிள்ளையின் தலையெழுத்து
நல்ல படி மாறி
அதை ஊர் கண்டிடணும்
ஆண் : உயிரோடு தான் இங்கு போராடுது
புயல் காற்றிலே சின்னப் பூ வாடுது
பூச்சூட நாள் பார்த்து பெண் பாவை நின்றாளே
பெண் பாடு என்னாகும் பூ வாடிப் போனாலே
ஆண் : சொந்தம் பதினாறு உண்டு
கூட உறவாட
யாரும் இல்ல கையெழுத்து போட
உண்மையிலே இங்கே
ஒரு சொந்தமுன்னு சொல்ல
சட்டப்படி பாத்தா
ரத்த சம்பந்தங்கள் அல்ல
ஒரு ஜீவன் அலை பாய
ஆண் : சொந்தம் பதினாறு உண்டு
கூட உறவாட
யாரும் இல்ல கையெழுத்து போட