பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
ஆண் : சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
பாட்டுச் சத்தம் கேட்கலையோ
பாடி வரும் குயிலே
நீ வா வா
தேடி வரும் மயிலே
நீ வா வா
ஆண் : சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
ஆண் : பாட்டாலே நான்
போட்ட பூவாரமே
படிப்பேனே நம் காதல்
தேவாரமே
உன் பேரை நான் பாட
தேனூறுமே
என் ஜீவன் உன்னோடு
இளைப்பாறுமே
ஆண் : பாடி அழைத்தேன்
உனையே வருவாய் குயிலே
தேடி தவிக்கும் மனமே
தினம் வா மயிலே
காதலெனும் ராகம் தாளம்
கூடும் இடமே
ஆண் : சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
பாட்டுச் சத்தம் கேட்கலையோ
பாடி வரும் குயிலே
நீ வா வா
தேடி வரும் மயிலே
நீ வா வா
ஆண் : சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
பெண் : நான் பாடும்
பாட்டென்றும் நீதானய்யா
நீயின்றி வாழ்வேனோ
நான்தானய்யா
வாழ்வென்று வாழ்ந்தாலே
உன்னோடுதான்
வா எந்தன் கண்ணா
நீ என்னோடுதான்
பெண் : ஜீவன் இருக்கும் வரைக்கும்
உனையே நினைக்கும்…
சேர துடிக்கும் இதயம்
உனையே அழைக்கும்
கூட வரும் காலம் நேரம்
இன்றே பிறக்கும்
ஆண் : சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
பாட்டுச் சத்தம் கேட்கலையோ
பாடி வரும் குயிலே
நீ வா வா
தேடி வரும் மயிலே
நீ வா வா
ஆண் : சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
பெண் : சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்
பாட்டுச் சத்தம் கேட்கலையோ
பாடி வரும் குயிலே
நீ வா வா
தேடி வரும் மயிலே
நீ வா வா
பெண் : சோலைமலை ஓரம்
கோலக் குயில் பாடும்