ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே
பூந்தூரலே சாமரங்கள் வீசுமே
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே
ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே
பறவைகளாய் பறவைகளாய்
பறக்கும் சின்ன வயதினிலே
கவலைகளை கவலைகளை காற்றில் பறக்க விடுவோமே
பவல் மல்லி பவள மல்லி பூக்கும் அழகை ரசிப்போமே
மணிக்கணக்கில் பூக்களிடம் அரட்டை அடித்து சிரிப்போமே
மனதில் மனதில் இசையின் சாரலே
இதுதான் வாழ்வில் இனிய நாட்களே
நினைத்து நினைத்து மகிழ்வதனால் வாழ்கை இனிக்குமே
ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனி சால்வை போர்த்துமே
பூந்தூரலே சாமரங்கள் வீசுமே
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே
மலர்களிடம் மலர்களிடம் தேனைக் கொஞ்சம் கேட்போமே
விழிகள் தரும் கனவுகளில் தேனை அள்ளி தெளிப்போமே
அனைவருமே விரும்பிடவே பாசத்தோடு இருப்போமே
புன்சிரிப்பை பரிசளித்து மனதை கொள்ளை அடிப்போமே
குழந்தை பருவம் சுகத்தின் எல்லையே
இதனை வாங்க விலைகள் இல்லையே
வாழ்வில் என்றும் மறுபடியும் கிடைப்பதில்லையே
ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே