பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
குழு : ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ…
ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ…
பெண் : தானானான தானானா னானா
தானா தானன தானா தானன தானனனானா
தானா தானன தானா தானன தானனனானா
ஆண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
பெண் : எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
ஆண் : உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும்
உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்
பெண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
ஆண் : பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
குழு : தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா
பெண் : இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
ஆண் : தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே
அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே
தொடாதே தொடாதே…….
பெண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
ஆண் : பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
ஆண் : தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
பெண் : நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ
ஆண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பெண் : பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
ஆண் : தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
இருவர் : தானானனா தானாதனா தானானானனா
தானானனா தானாதனா தானானானனா