பாடகி : பி. எஸ். சசி ரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பூவே இது பூஜைக் காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே ….
நாளும் உன்னை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ
பெண் : பூவே இது பூஜைக் காலமே
பெண் : சலங்கை தாளமே
எந்தன் காதில் கேட்குமோ
குயிலே…….ஏ….ஏ….
பெண் : சலங்கை தாளமே
எந்தன் காதில் கேட்குமோ
வாழை மாவிலை மஞ்சள்
வாசம் தோன்றுமோ
பனி வாடைக் காற்று வீசும்போது
பாவி மேனி வாடுதே
பெண் : பூவே இது பூஜைக் காலமே
பெண் : கண்ணை மூடியும்
மனம் தூங்கவில்லையே
நெஞ்சே…ஏ…..ஏ….
பெண் : கண்ணை மூடியும்
மனம் தூங்கவில்லையே
கண்ணன் ஞாபகம் உன்னில் நீங்கவில்லையே
இருமாலை சேர்ந்த தேவி ஏக்கம்
தீரவேண்டி ஏங்குதே
பெண் : பூவே இது பூஜைக் காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே ….
நாளும் உனை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ பூவே