பாடகி : எஸ். ஜானகி
இசைஅமைப்பாளர் : இளையராஜா
பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பெண் : பாட்டெடுப்போம் வா வா…
பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக
பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பெண் : பாடத்தை தள்ளி வைப்போம்
பாட்டுக்கள் அள்ளி வைப்போம்
ஆனந்த கோலத்துக்கு
ஆரம்ப புள்ளி வைப்போம்
பெண் : பறவை போல பறந்து பறந்து
படிப்பை கொஞ்சம் மறந்து மறந்து
ஆணையிட்டு ஆடவைத்தால்
தாமரை பூங்கொடி ஆடிடுமா
பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பெண் : பாட்டெடுப்போம் வா வா…
பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக
பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பெண் : மாமர சிட்டுக்களே..
மாதுளை மொட்டுக்களே
காலங்கள் உள்ளவரை…
நான் உங்கள் பக்கத்திலே…
பெண் : அறிவு நாளும் வளர வளர
தினமும் நானும் கதைகள் கூற
பூங்குருவி தேனருவி
ஆடிட வந்ததென் கைதழுவி
பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பெண் : பாட்டெடுப்போம் வா வா…
பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக
பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்