பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையைமைபாளர் : இளையராஜா
ஆண் : ஏஹே ஏ ஓஹோ லாலலா…….
ஏஹே ஏ ஓஹோ லாலலா…
ஓஓஓ….ஓஓஓ…..ஓ…ஓ…ஓ…
ஆண் : பழமுதிர்ச் சோலை
எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான்
அதற்காகத்தான்
ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம்
இங்கு ஓராயிரம்
ஆண் : பழமுதிர்ச் சோலை
எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான்
அதற்காகத்தான்
ஆண் : தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர் கொண்ட பூஞ்சோலை
நீர் கொண்டு ஆட
ஆண் : ஏரியில் மீன்
கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை
தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று
காவியம் பாட
ஆண் : பறவைகள் போல் நாம்
பறந்திட வேண்டும்
பனி மலை மேல் நாம்
மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை
மனம் கொண்டாடுதே
ஆண் : பழமுதிர்ச் சோலை
எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான்
அதற்காகத்தான்
ஆண் : பந்தங்கள் யாவும்
தொடர்க்கதை போல்
நாளும் வளர்ந்திடும்
நினைவுகளால்
ஆண் : நூலிழை போல் இங்கு
நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யென
கலந்திடும் நாள்
ஆண் : தந்தையும் தாயும்
மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட
உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி
வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட
சொர்க்கமெங்கே
ஆண் : நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள்
விழுவதில்லை
ஆண் : இலக்கியம் போல்
எங்கள் குடும்பமும் விளங்க
இடை விடாது மனமொரு
மகிழ்ச்சியில் திளைத்திட
ஆண் : பழமுதிர்ச் சோலை
எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான்
அதற்காகத்தான்
ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம்
இங்கு ஓராயிரம்
ஆண் : பழமுதிர்ச் சோலை
எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான்
அதற்காகத்தான்