பாடகர் : அதீப் முகமது
இசையமைப்பாளர் : பிரணவ் தாஸ்
ஆண் : காற்றே இளம் காற்றே
இசையாக வருவாயா
தொலை தூரம் சில காலம்
இவள் காதில் மெல்ல
ஆண் : பூவே வெண் பூவே
புதிதாக மலர்வாயா
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல
ஆண் : ஒரு காதல் ஒரு நேசம் இது
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம் செல்வோமே
அன்பே வா…..
ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
ஆண் : ஜன்னல் வந்த நிலவே
கண்ணில் நின்ற கனவே
மஞ்சம் சேர்ந்த உறவே
நம்மில் இல்லை பிரிவே
ஆண் : அணை தாண்டும் வெள்ளத்தில்
என் கண்ணில் கட்டி வைத்தேன்
அணையாத தீபம் போல்
உனை நெஞ்சில் ஏற்றி கொண்டேன்
ஆண் : என் ஜீவன் தருவேன்
உயிர் ஒளி நீ அணைவதில்லை
மறைவதில்லை……ஆஅ…….ஆ……
ஆண் : காற்றே இளம் காற்றே
இசையாக வருவாயா
தொலை தூரம் சில காலம்
இவள் காதில் மெல்ல
ஆண் : பூவே வெண் பூவே
புதிதாக மலர்வாயா
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல
ஆண் : ஒரு காதல் ஒரு நேசம் இது
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம் செல்வோமே
அன்பே வா…..
ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே…ஏ……