பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்
பெண் : ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்
பெண் : ஒரு நாள்
ஆண் : மஞ்சளின் மகராணி
குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள்
கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின்
நிழலைக் கண்டேனே
பெண் : உன் முகம் பார்த்து
மலர்ந்தேனே
உன் நிழல் தேடி
வளர்ந்தேனே….
பெண் : ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்
பெண் : உன்னிடம் நான் கண்ட
பெருமைகள் பல உண்டு
கோபம் வேகம் மாறாதோ
மாறும் நன்நாள்
எந்நாள்.. காண்பேனோ
ஆண் : புன்னகையாலே
எனை மாற்று
பொன்னழகே நீ
பூங்காற்று
ஆண் : ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்
பெண் : {மங்கல நாள் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின்
தீபம் நானாக} (2)
ஆண் : காவியம் போலே
வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப்
பார்த்திருப்போம்
பெண் : ஒரு நாள்
ஆண் : உன்னோடு ஒரு நாள்
பெண் : உறவினில் ஆட
ஆண் : புதுமைகள் காண
ஆண் மற்றும் பெண் :
காண்போமே எந்நாளும்
திருநாள்