ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை
ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை
திரு நாள் தேடி தோழியர் கூடி
சென்றார் திரும்பவில்லை
தினையும் பனையாய் வளர்ந்தே
இரு விழிகள் அரும்பவில்லை
ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை
இரவில் உலவும் திருடன்
அவன் என்றார்
திருடாது ஒரு நாளும்
காதல் இல்லையென்றேன்
எனையே அவன் பால் கொடுத்தேன்
என் இறைவன் திருடவில்லை
ஒரு நாள் இரவில்
கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என
நினைத்தேன் மறக்கவில்லை