பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
பெண் : ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ்க்கவிதை பாடினான்
பெண் : ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
ஆண் : தமிழ் கொண்ட வைகைப்போ…..லே
திருமேனி நடைபோட
பார் வேந்தன் நாளும்
ஊர்கோலம் போகும்
தேர் போலும் இடையாட
பெண் : பனிப் போல கொஞ்சும் உன்…..னை
பார்வைகள் எடைபோட
நீ கொஞ்சம் தழுவ
நான் கொஞ்சம் நழுவ
நாணங்கள் தடைபோட
ஆண் : மேலாடையாய் நான் மாறவோ
பெண் : கூடாதென நான் கூறவோ
வா….. மெல்ல வா……..
ஆண் : ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
பெண் : கடல் நீலம் கொண்ட கூ…ந்தல்
கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை
கடன் தந்த தேகம்
மன்னா நீ கொண்டாட
ஆண் : மாமல்லன் என்னைக் கொஞ்……சும்
சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத
காதல் சிற்பங்கள் உருவாக
பெண் : ஊடல் எனும் ஒரு நாடகம்
ஆண் : கூடல் தனில் அரங்கேறிடும்
வா…… நெருங்கி வா……..
பெண் : ஒரு காதல் நாயகன்
ஆண் : மலர் மாலை சூடினான்
பெண் : இரு கண்ணில் ஆயிரம்
ஆண் : தமிழ்க்கவிதை பாடினான்
பெண் : லாலா லால்ல லால்ல லா
லாலா லால்ல லால்ல லா