பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
குழு : லல்ல லல்ல ல ல ல லா
லல்ல லல்ல ல ல ல ல லா
ச க ரி க ரி ப
ச க ரி ப ச க ரி ப கா
ச க ரி க ரி ப
ச க ரி ப ச க ரி ப கா
ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
பெண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
ஆண் : பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
பெண் : காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
ஆண் : ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ ஓ ஓ
பெண் : வேறாரும் நெருங்காமல்
மனவாசல் தனை மூடுவேன்
ஆண் : உருவானது நல்ல சிவரஞ்சனி
குழு : ஹா….ஆஅ….ஆஅ….
பெண் : உனக்காகத்தான்
இந்த கீதாஞ்சலி
குழு : ஹா….ஆஅ….ஆஅ….
ஆண் : ராகங்களின் ஆலாபனை
பெண் : மோகங்களின் ஆராதனை
ஆண் : உடலும் மனமும்
தழுவும் பொழுதில் உருகும்
ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
குழு : ஹா….ஆஅ….ஆஅ…. (4)
பெண் : காவேரி கடல்சேர
அணைதாண்டி வரவில்லையோ….ஹோ ஓ ஓ
ஆண் : ஆசைகள் அலைபாய
ஆனந்தம் பெறவில்லையோ….
பெண் : வரும் நாளெல்லாம்
இனி மதனோற்சவம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….
ஆண் : வளையோசைதான்
நல்ல மணிமந்திரம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….
பெண் : நான்தானைய்யா நீலாம்பரி
ஆண் : தாலாட்டவா
ஹஹஹா….நடுராத்திரி
பெண் : ஸ்ருதியும் லயமும்
சுகமாய் இணையும் தருணம்
பெண் : ஒரு ஜீவன்தான்
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : உன் பாடல்தான்
ஆண் : ஹா…ஆஅ….ஆ….
பெண் : ஓயாமல் இசைக்கின்றது
ஆண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பெண் : பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
ஆண் : காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது