பாடகர்கள் : ஜாலி ஆபிரகாம் மற்றும் பவதாரணி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆ…….ஆ……ஆஅ……ஆ……ஆ……
ஆ…….ஆ……ஆஅ……ஆ……ஆ……
ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம்
அத மாத்திக் கொள்ளணுமாம்
நல்ல நாள் குறிக்கணுமாம்
அத நிச்சயம் செய்யணுமாம்
அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம்
கொட்டு முழங்கணுமாம்
பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
குழு : குக்குக்கு குக்குக்கு கூ குக்கு குக்கு கூ….
குக்குக்கு குக்குக்கு கூ குக்கு குக்கு கூ….
பெண் : கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல்
உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதய்யா
காற்றாக நான் கலந்து மூச்சாக உள்ளிருந்து
உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொல்லுதய்யா
ஆண் : கல்லான எம் மனச கரைச்சி விட்ட கட்டழகி
கண்ணீர தொடச்சி அந்த சாமி தானே பொட்டழகி
சொல்லாலே அம்பு எடுத்து கண்ணால குறி பார்த்ததும்
பொல்லாத சாமி முன்னே சொல்லி என்னை இழுத்ததும்
பெண் : சரியா தவறா அத நடத்திடும் தெய்வம்
தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம்
கொட்டு முழங்கணுமாம்……..
ஆண் : சிறு சிந்து சுமந்து வந்த காற்றும்
இனிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
குழு : ஆ…….ஆ……ஆஅ……ஆ……ஆ……
ஆ…….ஆ……ஆஅ……ஆ……ஆ……
ஆஅ…….ஆ…..ஆ……
ஆண் : பூவான பூவழகி பூப்போல தேர் வருமா
சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமா
வெள்ளி மணி குலுங்க விளையாடும் பூங்கிளியாம்
தங்க மணிச்சரமும் தான் கொண்டு வருமாம்
பெண் : முத்தான நிலவொளியில்
அன்பு குடிசை போடலாம்
காற்றாக கவிதை பாடி நாமும் அங்கு வீசலாம்
இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே
நில்லாத பறவை போல போதும் என்று வாழலாம்
ஆண் : அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம்
தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம்
கொட்டு முழங்கணுமாம்………
பெண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம்
அத மாத்திக் கொள்ளணுமாம்
நல்ல நாள் குறிக்கணுமாம்
அத நிச்சயம் செய்யணுமாம்
பெண் : அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம்
கொட்டு முழங்கணுமாம்
ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே……