பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ…..ஆஆஅ…..ஆஅ…..
ஆஅ…..ஆஆஅ…..ஆஅ…..
ஆ…..ஆஅ…..ஆ…..
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
பெண் : பூ முகம் வாடி இங்கே
உன்னை எதிர்பார்க்கும்…ம்ம்ம்….
புன்னகை மன்னனுக்கே
மாலைகளை கோர்க்கும்…ம்ம்ம்….
பெண் : ஆசைகளை தூது விட்டு
அன்புக் கரம் கேட்கும்
கண் இரண்டும் உன்னை
எதிர் பார்த்து நிதம் பூக்கும்
பெண் : ஆணழகே மனம்
தொடும் பேரழகே
வா அருகே அமுதெனை நீ பருக
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
பெண் : ஆடிடும் நீரலைகள்
உன் பெயர் கூறும்…ம்ம்ம்….
கூவிடும் குயிலினங்கள்
உன் புகழ் பாடும்…ம்ம்ம்….
பெண் : வானில் வரும் வெண்ணிலவும்
என்னை தினம் வாட்டும்
தேனுலவும் தென்றல் வந்து
என் உடலை மீட்டும்
பெண் : கானக் குயில்
தனிமையில் ஏங்குதிங்கே
வீணை ஒன்று
விரல்களைத் தேடுதிங்கே
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே
பெண் : நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை