பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : நில் நில் நில் இளந்தென்றலே
ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண் : எங்கள் சோலை என்றும் மலர
ஆண் : எந்த நாளும் இன்பம் வளர
பெண் : மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண் : மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
பெண் : லாலாலலலலலல்லா……..
பெண் : நில் நில் நில் இளந்தென்றலே
ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண் : ………………………..
பெண் : உன்னை எண்ணி நெற்றி பொட்டு வைத்தேன்
உந்தன் நெஞ்சை அதில் தொட்டு வைத்தேன்
ஆண் : அன்னையென்று உன்னை ஆக்கி வைத்தேன்
இன்னுமென்ன இன்பம் பாக்கி வைத்தேன்
பெண் : எந்நாளும் என் மனம் உன்னோடு சங்கமம்
நீதானே தந்தது கல்யாண மங்கலம்
ஆண் : பனி வாய் மலரே பிரியா உறவே
பெண் : நில் நில் நில் இளந்தென்றலே
ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண் : எங்கள் சோலை என்றும் மலர
ஆண் : எந்த நாளும் இன்பம் வளர
பெண் : மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண் : மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
லாலாலலலலலல்லா……..
பெண் : ………………………..
பெண் : மஞ்சள் கொண்டு உன்னை முந்திக் கொண்டு
மண்ணை விட்டு செல்லும் எண்ணம் உண்டு
ஆண் : பெண்ணல்லவே நீதான் தெய்வப் பிறவி
ஜென்மமெல்லாம் நீதான் எந்தன் துணைவி
பெண் : உன்னோடு வாழ்வது நான் செய்த புண்ணியம்
பொட்டோடு போவது நான் கொண்ட லட்சியம்
ஆண் : அலைகள் பிரியும் பிரிந்தால் இணையும்
பெண் : நில் நில் நில் இளந்தென்றலே
ஆண் : சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண் : எங்கள் சோலை என்றும் மலர
ஆண் : எந்த நாளும் இன்பம் வளர
பெண் : மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண் : மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
இருவர் : லாலாலலலலலல்லா……..
ல ல ல லாலா லாலா லா …(2)