பாடகர் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : தர்பூகா சிவா
ஆண் : நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று
அதுவாக தொடர்கின்றதே
பல ஆண்டாய் எண்ணையில்லா தீபங்கள்
தானாக சுடர் கொண்டதா
ஆண் : கருவெள்ளை நிறம் ஓவியம்
தன்னாலே வண்ணம் கூடுதா
ரயில் ஒன்றில் விட்ட நாவலோ
வழி தேடி வந்து வாசிக்க சொல்ல
ஆண் : திசை மாறும் ஓசைகளோ
இசையாக இக்காற்றிலே
வழிமாறும் வார்த்தைகளோ
கவிதை போல் கரையும் போதிலே
ஆண் : காலம் தாண்டி மீண்டும் கானா
தோற்றம் மாறி நெஞ்சம் மாறாது
பழைய மீசைகள் மறுபடி பூக்க
பழைய வாசனை என் மேலே
ஆண் : திசை மாறும் ஓசைகளோ
இசையாக இக்காற்றிலே
வழிமாறும் வார்த்தைகளோ
கவிதை போல் கரையும் போதிலே
ஆண் : நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று
அதுவாக தொடர்கின்றதே
ஆண் : திசை மாறும் ஓசைகளோ
இசையாக இக்காற்றிலே
வழிமாறும் வார்த்தைகளோ
கவிதை போல் கரையும் போதிலே