பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஹே…. ஹே….
ஆண் : ஹே ஹேய்….
ஆண் : ஹே…. ஹே….
ஆண் : ஹே ஹேய்….
ஆண் : ஹே ஹே
ஹேஹே ஹேஹெ ஹேஹே ஹேஹெ ஹே….
ஆண் : ஹே…. பபபா…
ஆண் : பபபா….
ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது ஹான்….
ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
ஆண் : ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்
இரு மலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஆண் : ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
ஆண் : இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை
ஆண் : இன்றும் என்றும் இருக்க வேண்டும்
எனது ஆசை ஹே ஹே
ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே
ஆண் : நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
ஆண் : யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றால்
அதற்காக நான் வழக்காடுவேன்
ஆண் : யாரும் உன்னை திருடிச் செல்ல
பார்த்து நிற்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்
ஆண் : எனது மனமும் எனது நினைவும்
உனது வசமே
ஆண் : நமக்கு ஏது பிரித்துப் பார்க்க
இரண்டு மனமே ஹே ஹே
ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே
ஆண் : நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
இருவர் : லாலல்லா லாலல்லா லாலல்லா…
லாலல்லா லாலல்லா லாலல்லா…