பாடகர்கள் : ஹரிணி, திப்பு மற்றும் ஹரிச்சரண்
இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்
ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…
பெண் : கனவினில் உன்னை பார்க்கும் போதும்
அருகினில் என்னை பார்க்க வேண்டும்
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே…..
ஆண் : நீ விளையாட்டு பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
எனை தாயை போல
தாங்க வேண்டும் மடியினிலே
ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…
ஆண் : நீ அருகில் தூங்கும் நேரமே
வானிலையும் மாறி போகுதே
நீயும் நினைத்தால் வானவில்
வந்து விடுமே
பெண் : உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் கூற வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே
என்றும் சுகமே
ஆண் : உன்னுடன் இருப்பதால்
உயிருடன் இருக்கிறேன்
பெண் : உனக்கென வேண்டுமா
உயிரையும் தருகிறேன்
ஆண் : நான் உன் மூச்சில் வாழும் வரம் அது
எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது
வலித்திடுமே……
ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…
பெண் : ………………………
ஆண் : நீ நடந்து போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குவேன்
தோளில் சுமந்தே தங்குவேன்
உன்னை தினமே….
பெண் : தோளிரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையே தாங்குவேன்
நெஞ்சில் தினமே….
ஆண் : சூரியன் உதிப்பதே
உன் முகம் கனவே
பெண் : பூமியில் பிறந்ததே
உன்னுடன் வாழவே
ஆண் : கரு மழை மேகம் யாவும்
இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும்
இனி கோயில் தேடி போக மாட்டேன்
தெய்வமும் நீ…….
ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…..