பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், மனோ, உன்னிகிருஷ்ணன்,
சுஜாதா மற்றும் ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி
ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி
ரத்தத்துல போடுது சாத்துக்குடி
ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுப்படி
தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுக்கடி
அனைவரும் : திருமணம் நிலவில வச்சுக்கடி
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி
ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி…தினாக்குதின..
குழு : சய்யா சய்யாரே ஹரே ஹாயிஹாயிஹாயிரே
சய்யா சய்யாரே ஹரே ஹாயிஹாயிஹாயிரே
ஆண் : நாடு நகரம் யாவும் இங்கே எங்கும் நம் பேச்சு
ஆண் : தேதி பார்த்து நேரம் குறித்து தேதியும் வச்சாச்சு
பெண் : வாழை மரங்கள் வாங்கி வரவே ஆளும் போயாச்சா
பெண் : வானவில்லை தூக்கி வந்து தோரணம் போட்டாச்சா
ஆண் : கல்யாண நாளன்று ஊரில் விடுமுறை விடுவோமா
கச்சேரி கேட்பதற்கே நாம் கிளின்டனை அழைப்போமா
ஆண் : நேற்று உன்னை பார்த்த பார்வைகள் நேர்மையானது
பெண் : இன்று என்னை பார்க்கும் பார்வையில் ஏதோ இருக்கிறது
ஆண் : ஊரிலெங்கும் கேட்கணும் நாதஸ்வரம்
காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்
பெண்கள் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி..ஹே ஹேய்…
குழு : ………………………….
பெண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பொண்ணு வரவேணும்
ஆண் : அருந்ததி இப்போ வரவில்லை என்றால் பாரதி வரவேணும்
ஆண் : காலை மாலை காதல் கடலில் மூழ்கி பார்ப்போமா
மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே முத்தமும் கொடுப்போமா
பெண் : கண்ணாலே பிறக்கிற காதல் கண்ணுக்கு தெரியாது
பெண்ணாக பிறந்தவர் இதயம் பிறருக்கு புரியாது
பெண் : சிங்கம் போல வந்து நின்று சேர்த்துக்கோ பாவா
ஆண் : இதயத்தில் நைல் நதி பாய்கிறது
மனசுக்குள்ளே ரயில் வண்டி ஓடியது
பெண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி..
பெண் : காதல் கூட்டணி போட்டிப் போட்டு கோட்டைய புடிச்சாச்சு
ஆண் : அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர் எல்லாம் மீசைய எடுத்தாச்சு
காதல் ரதமே நாளை தினமே ஊரில் வலம் வருமே
பெண் : எங்கள் தவமே தந்த வரமே ஒன்பது சுயம்வரமே
ஆண் : ஊர்கோலம் போகும் பாதைக்கு அனுமதி கேட்டாச்சா
பெண் : அரசாங்க வாசலில் காதல் அனுமதி கேட்பதில்லை
ஆண் : காலம் முழுதும் காதல் வீதியில் காவல் நானிருப்பேன்
ஆயுள் கைதியாக உனது நெஞ்சில் சிறை இருப்பேன்
ஆண் : தியேட்டரிலே டிக்கெட்டு தீர்ந்திடுச்சி
வீடு இப்போ ஹௌஸ்புல் ஆயிடுச்சி ஹே ஹேய் ஹேய்
ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
பெண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி
ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி
ரத்தத்துல போடுது சாத்துக்குடி
ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுப்படி
பெண் : தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுக்கடி
ஆண் : திருமணம் நிலவில வச்சுக்கடி
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி
அனைவரும் : லாலலலாலா லாலலலலாலா…..லாலலலாலா….