பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : மரகதவல்லிக்கு
மணக்கோலம்
என் மங்கலச் செல்விக்கு
மலர்க்கோலம்
ஆண் : கண்மணித் தாமரை
கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
கோலம் திருக்கோலம்
ஆண் : மரகதவல்லிக்கு
மணக்கோலம்
என் மங்கலச் செல்விக்கு
மலர்க்கோலம்
ஆண் : கண்மணித் தாமரை
கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
கோலம் திருக்கோலம்
ஆண் : காலையில் கதம்பங்கள்
அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
ஆண் : கட்டித் தங்கம் இனி மேல் அங்கே
என்ன பூவை அணிவாளோ
கட்டிக் கொண்ட கணவன் வந்து
சொன்ன பூவை அணிவாளோ
தினந்தோறும் திருநாளோ
ஆண் : மரகதவல்லிக்கு
மணக்கோலம்
என் மங்கலச் செல்விக்கு
மலர்க்கோலம்
ஆண் : கண்மணித் தாமரை
கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
கோலம் திருக்கோலம்
ஆண் : ஹா..அ……ஆஅ……ஆ…..ஆஅ…..
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஆண் : மலர் என்ற உறவு
பறிக்கும் வரை
மகள் என்ற உறவு
கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில்
மகிழ்ந்து விட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்
ஆண் : எந்தன் வீட்டு கன்று இன்று
எட்டி எட்டிப் போகின்றது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டிப் பார்க்கிறது
இமைகள் அதை மறைக்கிறது
ஆண் : மரகதவல்லிக்கு
மணக்கோலம்
என் மங்கலச் செல்விக்கு
மலர்க்கோலம்
ஆண் : கண்மணித் தாமரை
கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
கோலம் திருக்கோலம்