பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
ஆண் : மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழிப் பூவும் மலரும் காலை நேரம்
ஆண் : மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
ஆண் : காற்று பூவோடு கூடும்….
காதல் சங்கீதம் பாடும்
பார்த்து என்னுள்ளம் தேடும்…
பாசம் அன்போடு மூடும்
ஆண் : இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதைப் பாட்டு
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதைப் பாட்டு
ஆண் : இமைகளில் பல தாளம்
இசைகளை அது கூறும்
இரவிலும் பகலிலும் உனைப்
பார்த்துப் பார்த்து பார்வை வாடும்
பெண் : மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
பெண் : நீயும் நூறாண்டு வாழ
நேரம் பொன்னாக மாற
நானும் பாமாலை போட
தோளில் நான் வந்து சூட
பெண் : எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
பெண் : இது ஒரு சுக ராகம்
இதில் வரும் பல பாவம்
இனிமைகள் தொடர்கதை இனி
சோகம் ஏது சேரும் போது
ஆண் : மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
பெண் : இது பூபாளம் புது ஆலோலம்
ஆண் : விழிப் பூவும் மலரும் காலை நேரம்
ஆண் மற்றும் பெண் :
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு