மல்லிகை மாலை கட்டி
மங்கல மேளம் கொட்டி
கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை
பட்டதும் போதும் அம்மா
தொட்டதே பாவம் அம்மா
பெண்ணுக்கு தேவை இங்கே சுயமரியாதை
ஏன் நெஞ்சில் போராட்டம்
ஏன் கண்ணில் நீரோட்டம்
நீ பாடும் பூந்தோட்டம்
மல்லிகை மாலை கட்டி
குற்றங்கள் கற்பிக்கத் தானோ
கொண்டவன் கொண்டு வந்தானோ
உப்புக் கல்லை வைரம் என்று
நம்பி நடந்த பாவம்
மஞ்சள் தாலி பூ விலங்கா
காலில் போட்ட பொன் விலங்கா
பொல்லாத கணவன் பொருந்தாத ஒருவன்
பிழை செய்தான் இறைவன் ஹோ.....(மல்லிகை)
நாயகன் வாழ்கிற வீடு
நங்கைக்கு இங்கொரு காடு
இல்லறம் தான் நல்லறமாய்
தெய்வம் நினைத்தால் மாறும்
வாடைக் காலம் சென்றிடலாம்
வேனிற் காலம் வந்திடலாம்
சோலைத் தென்றல் பாடிடலாம்
சோகம் நீங்கி ஆடிடலாம்
நீ பாடக் கூடும் ஓர் புதிய ராகம்
ஓர் புதிய ராகம் ஹோ.....(மல்லிகை).