பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : சிற்பி
ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்டதோ
ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்டதோ
ஆண் : நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்
ஆண் : இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே
இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே
ஆண் : என் மன வீட்டின் ஒரு சாவி நீ தானே
முத்தாரமே மணி முத்தாரமே
ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்டதோ
ஆண் : பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு
பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு
ஆண் : தினம் தந்தி அடிக்கிறதே
தினம் தந்தி அடிக்கிறதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
ஆண் : நெஞ்சில் மணமாலை மலரே
உன் நினைவென்னும்
மணி ஓசையே…தினம் மணி ஓசையே…
ஆண் : குமுதம் போல் வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ
ஆண் : ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி
கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி
ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி
கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி
ஆண் : ஆனந்த விகடம் சொல்லு
என்னைப் பேரின்ப நதியில் தள்ளு
ஆனந்த விகடம் சொல்லு
என்னைப் பேரின்ப நதியில் தள்ளு
ஆண் : நான் பாக்யாதிபதி ஆனேன்
உன்னாலே கண்ணே உஷா
பசும் பொன்னே உஷா
ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வன்னத்திரைக் கனவுக் கண்டதோ
ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வன்னத்திரைக் கனவுக் கண்டதோ