பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : …………………………..
ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்
தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே
ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே…..ஏ…..ஏ….
பெண் : ஊருக்கு மேற்க ஊருணியோரம்
ஒத்தை பனை இருக்கு
ஊர் சத்தம் கொறஞ்சிருக்கு
இந்த செவ்வந்தி பூவும் தாமரையாக
நேரம் பொறந்திருக்கு
என் நெத்தி குளிர்ந்திருக்கு
ஆண் : வரும் சித்திர மாசம் வெத்தல போட
யோகம் பொறந்திருக்கு
அடி எப்போதும் சிக்காத சேலைக்கு இப்போது
சோதனை வந்திருக்கு
ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே…..ஏ…..ஏ….
பெண் : நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
ஆண் : நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
பெண் : ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்
தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே
ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே…..ஏ…..ஏ….
ஆண் : ஆத்துல குளிச்சு ஆறடி கூந்தல்
அள்ளி முடிஞ்சவளே
பூ கிள்ளி முடிஞ்சவளே
அந்த ஆறடி கூந்தல் ஏனடி மன்மதன்
வந்து ஒளிந்து கொள்ள
நான் மஞ்சம் வரைந்து கொள்ள
பெண் : ஒரு வேட்டியை வீசி விண்மீனைப் பிடித்த
விந்தையை என்ன சொல்ல
நான் என்னென்று உறைக்க எப்படி மறைக்க
பூவுக்கு பூட்டு இல்ல
ஆண் : கொலுசே கொலுசே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : எச பாடு கொலுசே
பெண் : ம்ம்ம்…..
ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
பெண் : நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
இருவர் : ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில்
தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே
ஆண் : கொலுசே கொலுசே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : எச பாடு கொலுசே
பெண் : ம்ம்ம்…..
ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே…ஏ….