பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நம்பினார் கெடுவதில்லை
நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும்
ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான்
நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சந்நிதிக்கு
வாராய் நெஞ்சே
ஆண் : கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
ஆண் : கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் …ஆ..
ஆண் : {தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான்} (2)
ஆண் : கேட்டவர்க்குக் கேட்டபடி
கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக்
கண்ணன் வந்தான்
ஆண் : தருமம் என்னும் தேரில் ஏறிக்
கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்
ஆண் : கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் …ஆ..
ஆண் : {முடவர்களை நடக்க வைக்கும்
பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும்
பிருந்தாவனம்} (2)
ஆண் : {குருடர்களைக் காண வைக்கும்
பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும்
பிருந்தாவனம்} (2)
ஆண் : அடையாத கதவிருக்கும்
சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும்
சந்நிதானம்
சந்நிதானம்
கண்ணன் சந்நிதானம்
சந்நிதானம்
ஆண் : கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் …ஆ..
ஆண் : கண்ணா ..ஆஆ…
கண்ணா கண்ணா
ஆண் : {கருணை என்னும் கண் திறந்து
காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக்
காக்க வேண்டும்} (2)
ஆண் : {கனி மழலைக் குரல் கொடுத்துப்
பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக்
கேட்க வேண்டும்} (2)
ஆண் : {கவலைகளை உன்னிடத்தில்
தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா} (2)
ஆண் : கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா
குழு : கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் …ஆ..
கண்ணன் வந்தான்